உள்நாடு | சமூக வாழ்வு | 2020-02-03 15:46:36

கல்முனையில் சுதந்திர தினத்தை மக்கள் மகிழ்சியுடன் அனுஸ்டிக்க தயாராகி வருகின்றனர்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தை கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மகிழ்சியுடன் அனுஸ்டிக்க தயாராகி வருகின்றனர். கல்முனை, மருதமுனை, நறிபிட்டிமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, சம்மாந்துறை, போன்ற நகரின் பொது இடங்கள், அரச அலுவலகங்கள், வீடுகள், வாகனங்களில் தேசியக் கொடிகளை பறக்கவிட்டு நாட்டின் சுதந்திர தினத்தை பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.


இன, மத, மொழி வேறுபாடுகளை களைந்து இலங்கையர் என்ற ரீதியில் ஒற்றுமையுடன் சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்பவதற்கு மக்கள் தேசியக் கொடிகளை வாங்குவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
இதே வேளை நகரின் முக்கிய பகுதிகளில் தேசியக் கொடிகள் நேற்று மும்மூரமாக விற்பனை செய்யப்பட்டு வருவதையும்;; காணக்கூடியதாக உள்ளது.
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts