கல்வி | கல்வி | 2019-12-22 07:50:56

 மாளிகைக்காடு ரிபா பாலர் பாடசாலையின் விடுகை விழா.

நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு ரிஃபா பாலர் பாடசாலையின் கலை நிகழ்வும் விடுகை விழாவும் நேற்று (20) சாய்ந்தமருது கமு/றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் பாலர் பாடசாலையின் அதிபர் அனைஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கமு/றியாழுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஐ. சம்சுடின், அல்- அஸ்ரக் தேசிய பாடசாலை  அதிபர் ஏ.ஏ.கபூர்  மற்றும் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜெஸ்மிர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பாராட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.  


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts