(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
முதியோருக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மெத்தைகள்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேசத்திலுள்ள 41 முதியவர்களுக்கு இரண்டு இலட்சத்து இருபத்து ஐயாயிரம் ரூபா (225000.00) பெறுமதியான மொத்தைகள் வழங்கப்பட்டன.
சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஜ.எம்.முர்சித்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூகசேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.