உள்நாடு | சமூக வாழ்வு | 2019-12-08 13:56:43

இலங்கையின் கெரலின் ஜூரி 2020 ஆம் ஆண்டின் திருமதி உலக அழகியாக மகுடம் சூடினார்

2020 ஆம் ஆண்டின் திருமதி உலக அழகியாக இலங்கையின் கெரலின் ஜூரி மகுடம் சூடியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ்வேகாசில் இடம்பெற்ற உலகின் திருமணமானோருக்கான அழகிகள் போட்டியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

51 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் மத்தியில் அவர் மகுடம் சூடியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு திருமதி உலக அழகி பட்டம் கிடைத்துள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் 1984 ஆம் ஆண்டில் ரோசி சேனாநாயக்க இந்த மகுடத்தை சூடியமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts