பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-11-30 20:36:29

எச்.எம்.அன்வர் அலி எழுதிய "ஆல விருட்சம்" நூல் வெளியீடுட்டு விழா

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் ஒரு நுற்றாண்டைத் தாண்டிய வரலாற்றுத் தொகுப்பு எச்.எம்.அன்வர் அலி எழுதிய "ஆல விருட்சம்" நூல் வெளியீடுட்டு விழா சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சீ.ஏ.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நூல் அறிமுக உரையினை முன்னாள் மாகாண பணிப்பாளர் யூ.எல்.அலியாரும், நூல் விமர்சனத்தினை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பிரதி பதிவாளர் கவிஞர் மன்சூர் ஏ.காதர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோரும், ஏற்புரையை நூல் ஆசிரியர் எச்.எம்.அன்வர் அலியும் நிகழ்த்தினார்கள்.

நூலின் முதல் பிரதியினை நூல் ஆசிரியர் எச்.எம்.அன்வர் அலியிடமிருந்து திகாமடுல்ல மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் ஆகியோர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது கலந்து கொண்ட அதிதிகளினால் முன்னிலை பிரதி மற்றும் சிறப்பு பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், உலமாக்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts