(மருதமுனை நிஸா,மின்ஹாஜ்)
அப்துல் அசீஸ் சமூக சேவை அமைப்பு ,
அப்துல் அசீஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் சனி (30) அன்று அப்துல் அசீஸ் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் ஏ.ஏ. அப்துல் லத்தீப் தலைமையில் மருதமுனை கலாராச மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்,கௌரவ அதிதிகளாக, நிந்தவூர் பிரதேச சபை உப தலைவர் வை.எல்.உதுமாலெப்பை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அறுவை சிகிச்சை ஆலோசக நிபுணர் ஏ.டபியூ.எம்.சமீம், நிந்தவூர் மக்கள் வங்கி முகாமையாளர் பி.ரி.நஸ்றுதீன், மருதமுனை சுப்பர் சென்டர் ஏ.ஆர்.முஹம்மட் அஸாம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.