“நான் இந்த தேர்தலில் பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளில் வெற்றி பெறுவேன் என்று எனக்கு தெரியும்.
ஆகவே இந்த வெற்றியின் பங்காளியாக தமிழ், முஸ்லிம் மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன்.
ஆனால் அவர்கள் அதனை புறக்கணித்து விட்டார்கள்.
ஆனால் நான் இந்த நாட்டில் அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதி.
ஆகவே மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்.
எதிர்காலத்தில் இந்த நாட்டை முன்னேற்றி அபிவிருத்திப் பாதையில் ஒன்றாய் முன்னோக்கிச் செல்ல என்னோடு கைகோர்துக்கொள்ளுங்கள்.”