எம்.என்.எம்.அப்ராஸ்
கல்வி அமைச்சினால் இவ் வருடம் ஏற்ப்பாடு செய்யப்பட்ட தேசிய ரீதியிலான ஆங்கில மொழித் தினப் போட்டியில் சொல்வெதழுதல் (dictation) பிரிவில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் தரம் 7 இல் இரு மொழிப் பிரிவில்( bilingual) கல்வி கற்கும் மாணவன் என் .எம்.சாமிக் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரை கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் பிரதி அதிபர்கள், இரு மொழி பிரிவு இணைப்பாளர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர் .