கலைஞர்ஏ.ஓ.அனல்
வெல்லாவெளி சக்தி கலாமன்றம் ஏற்பாட்டில் , "நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு (10.11.2019)
அன்று கவிக்கோ வெல்லவூர் கோபால் தலைமையில் வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
நூலின் முதல் பிரதியை, சைவ புரவலர் திரு வி. ரஞ்சிதமூர்த்தி பெறவுள்ளார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு,ஊடகவியலாளர் திரு.எஸ்.நவா (நவரத்தனம்) , கலாசார மத்திய நிலைய பொறுப்பாளர் திரு.ஏ.தேவரூபன்.
கௌரவ அதிதிகளாக,ஆலய பரிபாலன் சபை தலைவர் திரு சி.கணேஸ்வரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.ரி. அருள்ராஜா,கலாசார உத்தியோகத்தர் திரு.ச.சோமசுந்தரம், முதன்மை அதிதிகளாக பிரதேச செயலாளர், செல்வி ஆர்.ராகுலநாயகி,சட்டத்தரணி மு.கணேசராசா,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.ஆனந்தசிறி
மற்றும் சிறப்பு அதிதிகள் கவிஞர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.