கல்வி | கல்வி | 2019-05-11 09:15:54

அல்-மனார் மத்திய கல்லூரியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வு

(தானிஸ்)

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் 2019ஆம் ஆண்டின் தவணைப் பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திங்கள்( 04) பாடசாலையின் அதிபர் எம்.ஜே.அப்துல் ஹசீன் தலைமையில் பாடசாலையின் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அயூப் முஹம்மட் நியாஸ் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் ,மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

2019 ஆம் ஆண்டின் ஒவ்வொரு தவணைப் பரீட்சையிலும் வகுப்பு வாரியாக அதிக புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts