உள்நாடு | அரசியல் | 2019-11-01 15:56:20

கல்முனை மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகராக அமீர் நியமனம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் நிதியொதுக்கீடுகளின் கீழும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் நிதியொதுக்கீடுகளின் கீழும் கல்முனை மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கான வேலைகள் அத்தியட்சகராக மாநகர சபையின் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நியமனக் கடிதம்  வியாழக்கிழமை (31-10-2019) மாநகர முதல்வரினால் கையளிக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts