மருதமுனை நிஸா
சம்மாந்துறை வெளியீட்டுப் பணியகத்தின் ஏற்பாட்டில் "சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் "எனும் 808 பக்கங்களை கொண்டமைந்த வரலாற்று நூலின் வெளியீட்டு விழா புதன் (23.10.2019) அன்று கலாபூஷனம் ஏ.சி.ஏ.எம்.புஹாரி அவர்களது தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது .
பிரதம அதிதிதியாக கலந்து கொண்ட தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் அவர்களிடமிருந்து நூலின் முதற் பிரதியை இளம் புரவலர் மனிதநேயன் இர்ஷாத் ஏ.காதர் பெற்றுக் கொண்டனர்.
பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் பிரமுகர்களும் கவிஞர்களும் கலந்துகொண்டனர்.