நிப்றாஸ் மன்சூர்
சம்மாந்துறை மல்கம்பிட்டி தர்காவின் செய்ஹுனா சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், செய்ஹுனா கலந்தர் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவிலான மாபெரும் கந்தூரி நிகழ்வு அண்மையில் (13) மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவில் உலமாஉகளும், நிர்வாகிகளும், பெரியார்களும், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மல்கம்பிட்டி தர்ஹாவானது பல நூற்றாண்டு காலமாக மூவின மக்கள் மத்தியில் அன்பையும் சமாதானத்தையும் நிலை நாட்டுவதில் பாரிய பங்களிப்பு செய்து வருவதுடன் இலங்கை பூர்வீக முஸ்லிம் மக்களின் இருப்பின் அசைக்க முடியாத அடையாளங்களாகவும் திகழ்ந்து வருகின்றது.