அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த கூட்டம் இன்று 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு போரத்தின் தலைவர் எம். சஹாப்தீன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் போரத்தின் எதிர்கால நடவடிக்கைகள் சமூகம்சார் நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வது போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட உள்ளதாக ஊடகத்தின் கௌரவ செயலாளர் எம்.எஸ்.எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.
செயலாளர்,
எம்.எஸ்.எம். ஹனீபா,
(0776993838)