ரி.எம்.நியூஸ் ஊடக வலையமைப்பின் ரி-சேர்ட் அறிமுக விழா அண்மையில் மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபையின் முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் ரி.எம்.முபாரிஸ், பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையும், ஏசியா பவுண்டேசன் ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர்கள், கல்வியலாளர்கள், அரசியல்பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.