உள்நாடு | சமூக வாழ்வு | 1970-01-01 05:30:00

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு  சமூக ஊடகங்கள்  தொடர்பில் விழிப்புணர்வு 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் vikalpa.org ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு இன்று (28) சனிக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்றது.

"சமூக ஊடகங்களும் - ஒழுக்க நெறியும்" எனும் தொனிப்பொருளில் இந்த செய்லமர்வு இடம்பெற்றது.

vikalpa.org பிரதம ஆசிரியர் சம்பத் சமரக்கோன், ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநெசனல் நிறுவனத்தின் தகவல் தொழில்நூட்ப முகாமையாளர் ஹரித்த தஹாநாயக்க ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு சமூக ஊடங்ககளை சிறந்த முறையில் பொறுப்புடன் எவ்வாறு கையாள்வது பற்றியும்
அதன் நன்மை, தீமைகள் ஆகிய விடயங்களை எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா
போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான்,
தேசிய அமைப்பாளர் எம்.எப்.றிபாஸ் மற்றும்
விகல்ப இணையத்தளத்தின் இணை ஆசிரியர் இஷாரா தனசேகர ஆகியோர் இந்நெறியை நெறிப்படுத்தினர். 

இந்த ஒரு நாள் செயலமர்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அச்சு, இலத்திரனியல், இணைய ஊடகவியலாளர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts