(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை டெக் லேன்ங் (Tech- Lang) ஆங்கில முன்பள்ளி மாணவர்களின் 20வது வருடாந்த சந்தைக் கண்காட்சியும் விற்பனையும் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் முன்பள்ளிப் பாடசாலையின் தலைவரும் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளருமான ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப், முன்பள்ளி ஆசிரியைகளான எம்.சி.யு.றுபைதா, எம்.எம்.ஹஸீனா பர்வின்,எம்.சி.கதீஜா உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.