பாறுக் ஷிஹான் ,நிஸா
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய வைத்தியசாலை வைத்தியர்கள் ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
புதன் கிழமை(18) காலை 8 மணி முதல் வியாழக்கிழமை(19) காலை 8 மணி வரையிலான 24 மணித்தியாலயங்கள் இப் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ள சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன் போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, மருதமுனை வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சில வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு கிளினிக் காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றமையால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.