சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊழல் முறைகேடு ஒழிப்பு பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரி உட்பட 8 பேர் கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட துணை பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சாஜன், 5 பொலிஸ் கான்ஸ்டபிகள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி உள்ளிட்டவர்களே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி வென்னப்புவ பொலிஸ் பிரிவுக் ஹோட்டல் ஒன்றில் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் சிலரை கைது செய்திருந்தனர். 20 சந்தேக நபர்களுக்கும் மேற்பட்டவர்களில் 9 பேரை மாத்திரம் கைது செய்து ஏனையோரை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக சூதாட்ட இடத்தில் இருந்த பணம் மற்றும் சந்தேக நபர்கள் வைத்திருந்த பணத்தையும் முறைகேடாக பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களின் அடிப்படையில் நாத்தாண்டிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இவர்கள் கடமையில் இருந்து நிறுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது