பாறுக் ஷிஹான்
கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து கொட்டாஞ்சேனை- ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமை(16) மதியம் பாபர் வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கொட்டாஞ்சேனை முதல் புறக்கோட்டை நவலோக சந்திவரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்கா டாம் வீதி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவேஇ வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.