(எம்.என்.எம்.அப்ராஸ்)
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கலாச்சார அலுவல்கள் திணைக்களம், அரச இலக்கிய ஆலோசனைக்குழு ஏற்பாட்டில் 2019 அரச இலக்கிய விருது வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட நூல்களுள் இறுதிச்சுற்றில் சிறந்த சுய புலமைத்துவஆய்வுசார்படைப்பு இலக்கியம் எனும் தொகுப்பில் மூன்று நூல்களுள் ஒன்றாக முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கதுல்லா எழுதிய
" ஏ.ஆர். மன்சூர்வாழ்வும் பணிகளும்" என்ற நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது .
அரச இலக்கிய விருது வழங்கல் நிகழ்வு வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் எதிர்வரும் 2019.09.12ம் திகதி பி.ப. 3.00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்தத சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.