(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
எழுத்தாளர் உமா வரதராஜன் எழதிய மோகத்திரை கட்டுரை நூல் அறிமுக நிகழ்வு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று (31.08.2019) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் டாக்டர் திருமதி புஸ்பலதா லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
பேராசிரியர் சி.மௌனகுரு முதற்பிரதியை வெளியீட்டு வைத்து வெளியீட்டுரையை நிகழ்த்தினார். முதற் பிரதியை கவிஞர் சொலைக்கிளி பெற்றுக்கொண்டார். வரவேற்புரையை பா.செ.புவிராஜா நிகழ்த்த அறிமுகவுரையை சிவ வரதராஜனும் , நூல் நோக்குரையைய் திருமதி சிவப்பிரியா சிவராம்,ஏ.ஹசீன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
கவிஞர் சோலைக்கிழி சிறப்புரையை நிகழ்த்தினார்
திருமதி பிரியதர்ஷனி ஜெகதீஸ்வரன்,ஜூட் நிரோஷன்,குணநாதன் சுகிர்தராஜன்,ஆகியோர் நிகழ்வுக்கு அணிசேர்க்கும் வகையில் தீபம் இசையமைப்பில் பாடல்களை பாடினார்கள்.
நன்றியுரை சி.புனிதன் நிகழ்த்த, நிகழ்ச்சித் தொகுப்பை செல்வி ச.கஜானா திறமையாக செதிக்கினார்.