பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-08-13 10:27:49

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை

நூருள் ஹுதா உமர்

மாளிகைக்காடு பிரதேசத்தில் நேற்று (12) ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இத்தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையினை மௌலவி ஏ.ஆர்.முகம்மட் சப்ராஸ் நடத்தி வைத்ததுடன் குத்பா பேருரையினையும் நிகழ்த்தினார்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடற்கரைத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெருநாள் தொழுகை காலை 6:30 மணிக்கு இன்று(12) நடைபெற்றது. பெருநாள் தொழுகை விசேட உரையை மௌலவி. ஷாமில் மஜீதி நிகழ்த்தினார்.  


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts