-நூருள் ஹுதா உமர்-
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான வாசிகசாலைக்கு தன்னால் எழுதப்பட்ட மற்றும் தன்னுடைய இலக்கிய வரலாற்றில் சேகரிக்கப்பட்ட அறிய பல புத்தகங்கள் அடங்களாக 2000க்கும் மேற்பட்ட பல்துறை சார்ந்த நூல்களை கையளிக்கும் நிகழ்வு (27) மாலை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசியர் எம்.எம்.நாஜிம் கலந்துகொண்டார். மேலும் தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமிஸ் அப்துல்லாஹ், பிடாதிபதிகள், விரிவுரையாளர்கள், நூலகர்கள், பிரதேச முக்கிய இலக்கியவாதிகள், மருதூர் ஏ மஜீத் அவர்களின் குடும்பத்தினர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் அறிவை விருத்திசெய்யும் நோக்கிலும், அவர்களின் கல்விக்கு உதவும் வகையிலும் பொறுப்பேற்கப்பட்ட இந்த நூல்கள் பிரதான வாசிகசாலையில் வைக்கப்பட்டுள்ளன.