கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-06-26 21:07:21

இறக்கிவிடு உன் அருள்மழையை - கவிதை ஆக்கம்

இறக்கிவிடு உன் அருள்மழையை
***************************************

மருதமுனை நிஸா 

பதறுகிறது இங்கு பிஞ்சுக்குழந்தைகள்
அவதியில் இங்கு முதியவர்கள்
அல்லலுறுகின்றனர் உன்-
படைப்புக்கள் இப்பாரினிலே
இறைவா உன் கருணையைத்தா!

தவறுகள் செய்திருந்தால் எமை
மன்னித்துவிடு
எங்கள் பாவங்களை இப்பாரினிலே போக்கிவிடு!

வெப்பத்தால் குளிர்தேடி அலைகின்றனர் உம் உம்மதுகள்
கருணைகாட்டு றஹ்மானே!

மரங்களும் மலர்வனங்களும்
பறவைகளும் உயிர் ஜீவராசிகளும்
உயிர் துறக்கும் நிலையில் !

மண்டியிட்டு நாம் சிரம் பணிகின்றோம்
ஈரம் தந்துவிடு எம்- 
மண்ணை நனைத்துவிடு!

உன்னை வணங்காதவரும்
வணங்கட்டும் என்றா இப்படி ஒரு சோதனை?

தாங்க முடியாத வெப்பத்தினால்
ஏங்கி நிற்கின்ற உன்-
உம்மத்துகளுக்கு வறட்சியை போக்கிவிடு றப்பே!

மழைதந்து களைந்துவிடு
எம் கஷ்டத்தை
ஏழையும் பணக்காரனும் ஒன்றென அறிய வைக்கவா
இந்த சோதனை ?

குடிசையும் மாடிவீடும்
கொழுந்துவிட்டெரிகிறது
உன் சோதனையால்
இரக்கமுடையவனே
இறக்கிவிடு உன் அருள்மழையை!


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts