ஐந்து வருடங்களின் பின்னர் தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூலமான ஆசிரியர் நியமனம் இன்று (15) சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதற்கமைய மாகாணத்திலுள்ள 12 தமிழ் மற்றும் 30 முஸ்லிம் பாடசாலைகளுக்காக 94 ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன
தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோனின் உத்தரவிற்கு அமையவே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.