கலை இலக்கியம் | கல்வி | 2019-06-16 00:28:44

ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய "தோறாப்பாடு"' சமூக நாவல் வெளியீட்டு விழா


ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஓலுவில் மக்களின் துயரத்தினை எடுத்தியம்பும் 'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீட்டு விழா ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று (15) நடைபெற்றது.

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனீபா இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சி.பைசல் காசிம் கலந்துகொணடார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.யோகராசா, தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, பிரதேச சபை உறுப்பினர்கள், கல்விமான்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட மேலும் பலர் பலர் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts