கல்வி | கல்வி | 2019-05-25 11:53:19

முன்பள்ளிகளுக்கு Water Filter வழங்கும் நிகழ்வு

நாட்டிற்காக நாம் ஒன்றிணைவோம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்பள்ளிகளுக்கு Water Filter வழங்கும் நிகழ்வு இன்று 2019.05.25 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. ராஜதுரை அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.என்.எம். றம்ஸான், திட்டமிடல் பிரிவு பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.எம். ஹசன், முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச். சம்றினா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.எப். சிபாயா மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம். கஸ்பியா பீவி ஆகியோர் கலந்து கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களிடம் Water Filter களை வழங்கினர். அத்தோடு கிட்னி நோயினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும் Water Filter வழங்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts