அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர எவ்வித தேவையும் இல்லை என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று (22) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவர் தனது பதவியில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்