கல்வி | கல்வி | 2019-05-21 09:49:47

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா!..

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் அவர்களின் 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலையின் நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (20) நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கப்பல் துறை, துறைமுகங்கள் பிரதியமைச்சருமான அல்ஹாஜ் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களும், விசேஷட அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் வை.எல். சுலைமான்லெப்பை, நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், நிந்தவூரின் கல்விச்சமூகம், உயர் அதிகாரிகள், பாடசாலை சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts