இலக்கியன் முர்ஷித் எழுதிய "நஞ்சுண்ட நிலவு" கவிதை நூல் வெளியீட்டு விழா நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று (31) இடம்பெற்றது.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு
கெளரவ அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் ராஜாங்க அமைச்சருமான அமீர் அலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைபாளரும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஃரூப், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹ்மான், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தவிசாளர், எழுத்தாளர் பஷீர் சேகுதாவுத், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் ஆகியோர் கலந்துகொண்டதோடு கலை, இலக்கிய மற்றும் சமூக ஆளுமைகள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.