அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 24வது ஊடகவிருது வழங்கும் (கிழக்கு மாகாணம்) நிகழ்வு சம்மேளனத்தின் தலைவர் கலாபூசனம் மீரா இஸ்ஸதீன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) கல்முனை ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொழில் மற்றும் வர்த்தகம் நீண்ட கால இடம் பெயர்ந்தோர் குடியோற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி தொழில் பயிற்சி அமைச்சர் கெளரவ றிஷாத் பதியுத்தீன் கலந்து கொண்டார்.
48 ஊடகவியலாளர்களும், 04 சமூக சேவையாளர்களும் இன்றைய நிகழ்வில் பொன்னாடை போர்த்தி, பதக்கம் அணிவித்து, ஞாபகச்சின்னனம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். நிகழ்வில் கெளரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர்கள் அல்-ஹாஜ் அமீர் அலி பாலித்த தேவபெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,சிறியாணி விஜேயவிக்கிரம, ஏ.எல்.எம்.நஸீர், கலாநிதி எஸ்.எம். இஸ்மயில், நவமணி மத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன், வசந்தம் தொலைக்காட்சி செய்திப் பிரிவு பணிப்பாளர் ஏ.எல்.இர்பான் உட்பட பல ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.