(பாறுக் ஷிஹான்)
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் முன்னெடுக்கும் நீதம் - 07 மலர் வெளியீட்டு விழா யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீட மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(3) நடைபெற்றது .
இந் நிகழ்வில் இலங்கையின் உயர்நீதிமன்ற நீதியரசர் சி .துரைராஜா பிரதம விருந்தினராகவும் , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இதில் யாழ் மாவட்டத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி லெனின்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் மூத்த சட்டவாளர்கள் , சட்டபீட மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.