கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-03-02 23:55:55

அம்பாறை மாவட்டத்தில் புகைப்பட கலைஞர்களை ஒன்றிணைத்து புதிய பேரவை ஸ்தாபிப்பு

(ஏ.ஆர்.ஏ.நபாயில், ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள புகைப்பட கலைஞர்களை ஒன்றிணைத்து புதிய பேரவை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மொழிமூல பிரதேசங்களில் உள்ள புகைப்பட கலைஞர்களை

ஊக்கப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட புகைப்பட கலைஞர்களுக்கான செயலமர்வு இன்று(02) நிந்தவூர் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் 

மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம். றின்ஸானின் தலமையில் 

நடைபெற்றது.

இலங்கை தேசத்தில்

உயர்ந்த ஆக்கபூர்வமான புகைப்படக் கலையினை உருவாக்கி புகைப்பட இரசனையுள்ள சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடா வருடம் "அரச புகைப்பட விழா" நடாத்தப்படுகின்றது. 

இதனுடாக மாவட்டத்தில் தலை சிறந்த புகைப்பட கலைஞர்களை உருவாக்கும் நோக்கில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பபட்டிருந்தது. இதில் வளவாளராக எ.ஜே.எம்.பிறோஸ் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

இங்கு புகைப்பட கலைஞர்களுக்கான புதிய பேரவை ஸ்தாபிக்கப்பட்டது.

தலைவர் -எ.ஜே.எம்.பிறோஸ்,

செயலாளர் -ரி.கே.றஹ்மத்துல்லா,

பிரதித் தலைவர் - எம்.ஐ.எம்.முஜாஹித்,

பொருளாளர் - ஆர்.துஷிதன், உப செயலாளர் -ரி. தனுஷன் ஆகியோரும் பிரதேச ரீதியாகவும் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதியில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts