கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-01-19 08:48:21

பேரன்பின் ஈரமொழி கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று

அக்கரைப்பற்று சமூக அரசியல் படிப்பகம் ஏற்பாடு செய்துள்ள சிறாஜ் மஷ்ஹூர் எழுதிய ”பேரன்பின் ஈரமொழி” கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று(19.01.2019) பி.ப.3.55 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள நீர்ப் பூங்காவில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.யோகராசா கலந்து கொள்ளவுள்ளார்.

கருத்துரைகளை ஏ.எம்.றியாஸ் அஹமட் (அம்ரிதா ஏயெம்),அனார், றியாஸ் குரானா, அப்துல் றஸாக் ஆகியோர் வழங்கவுள்ளனர்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts